தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைக்கோரி டிசம்பர் 3 ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கக்கோரியும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.
மேலும் எந்தெந்த அணியின் சார்பில், எந்த வகை போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் பொறுப்பாளர்கள் அடங்கிய பட்டியலின் விபரங்களையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதனைப்படிக்க...இபிஎஸ் தூர்வாரியது கண்மாயா? கஜானாவா? எனத் தெரியவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News