சொம்பைக் கொடுத்து அண்டாவை திருடுபவர்கள் திமுகவினர் என்று உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் உசிலம்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஐயப்பன் உசிலம்பட்டி நகராட்சி 24 வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது திமுக கட்சியினர் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கொண்டிருக்கின்றனர். ஊழல் கட்சி என்றாலே திமுக என்று கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும்,உசிலம்பட்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் சொம்பைக் கொடுத்து அண்டாவை திருடுபவர்கள் என கடுமையாக விமர்சித்து பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News