தமிழ்நாட்டில் இன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 50,000 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது தவணையை சரியான நேரத்தில் செலுத்தி முடிக்காமல் உள்ளனர். இதுவரை 74% பேர் முதல் தவணையும், 34% நபர்கள் இரண்டாம் தவணையும் செலுத்தி முடித்துள்ளனர். நவம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் முதல் தவணை செலுத்தி முடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
![image](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1637459424177.jpeg)
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி சற்றே பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய முகாமை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மருத்துவத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் 2000 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News