30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கீரனூர் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் உடல் நல்லடக்கம்-Keeranur SSI honors government with 30 bombs Bhuminathan's physical well-being

இன்று அதிகாலை ஆடு திருடிய கும்பலை துரத்திச் சென்ற, திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அத்திருடர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்திருந்தார். அவருடைய குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.1 கோடி ரூபாய் நிதி அறிவித்திருந்தது தமிழக அரசு. 


தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்க தனிப்படையும் அனுமதிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த சோழமாநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


image

அவற்றை தொடர்ந்து தற்போது, அவரது உடல் அவர் வீட்டிலிருந்து இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக எடுத்துகொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, சோழமாநகரில் உள்ள இடுகாட்டில் அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post