சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: இந்திய அணி நாளை துபாய் பயணம்

புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (15-ம் தேதி) துபாய் புறப்பட்டுச் செல்கிறது. இந்தத் தொடரில் பிசிசிஐ-யின் புதிய பயண கொள்கை முதல் முறையாக அமலாகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் பயணம் செல்ல மாட்டார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடர் சுமார் 3 வார காலத்தில் முடிவடைகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல பிசிசிஐ அனுமதிக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post