ODI WC 2023 | பட்டத்தை வெல்லும் நோக்கில் பாகிஸ்தான் அணி!

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

இதில் பங்கேற்று விளையாடும் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பட்டத்தை வெல்லும் நோக்கில் இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் ஆசிய அணிகளுக்கு சாதகம் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பட்டம் வெல்லும் ஃபேவரைட் அணிகளில் கிரிக்கெட் வல்லுநர்கள் பார்க்கும் அணியாக பாகிஸ்தான் உள்ளது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post