சச்சின் டெண்டுல்கரைப் போல் விராட் கோலியை  தோளில் சுமந்து வலம்வர வேண்டும் - சேவாக் விருப்பம்

இந்திய கிரிக்கெட்டின், உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரகளில் இருவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி. சாதனை மன்னனாகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை உடைக்கும் நெருக்கத்தில் இருக்கிறார் விராட் கோலி. இருவரும் சேர்ந்து ஆடியிருந்தாலும் இருவரும் கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டத்துக்குரியவர்களே.

சச்சின் அதிக சதங்கள் (100), அதிக ரன்கள் என்று சாதனையை வைத்திருப்பவர் என்றால் விராட் கோலி அதிவேகமாக 10,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்தவர், விரட்டல் மன்னன் என்ற அளவுக்கு பல போட்டிகளில் இந்திய அணியை எந்த இலக்காக இருந்தாலும் விரட்டி வெற்றிபெறச் செய்துள்ளார். 2011 உலகக்கோப்பை தொடரில் இருவரும் சேர்ந்து ஆடினர். 2011 உலகக்கோப்பை சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பை என்பதால் அவருக்காக உலகக்கோப்பையை வெல்ல இந்தியா கடுமையாகப் பயிற்சி செய்து கடைசியில் வென்றது, அப்போது சச்சின் டெண்டுல்கரை யுவராஜ் சிங் முன்னெடுப்பில் வீரர்கள் தோளில் சுமந்து மைதானம் முழுவதும் சுற்றி வந்தனர்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post