கஸ்டடி: திரை விமர்சனம்

கடமை தவறாத கடைநிலைக் காவலரான சிவா (நாக சைதன்யா), காதலி ரேவதியை (கீர்த்தி ஷெட்டி), அவரது பெற்றோர் நடத்தவிருக்கும் அவசரத் திருமணத்திலிருந்து மீட்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இந்நிலையில், மாநில முதல்வருக்காக (பிரியாமணி) கொலைகளைச் செய்திருக்கும் ராஜு (அரவிந்த்சாமி), அவரைக் கைது செய்து அழைத்துச் செல்லும் சிபிஐ அதிகாரி ஜார்ஜ் (சம்பத்) ஆகியோரை, சாலை விதிமீறல் வழக்கில் கைது செய்கிறார் சிவா. முதல்வர் உத்தரவுபடி, சிபிஐ-யிடமிருந்து ராஜுவை மீட்டு அழிக்க முயல்கிறது காவல்துறை. ஆனால் அவர்களை வீழ்த்தி ராஜுவையும் ஜார்ஜையும் அழைத்துக்கொண்டு பெங்களூரு நீதிமன்றம் செல்கிறார் சிவா. ஐஜி (சரத்குமார்) தலைமையிலான போலீஸ், இவர்களைப் பிடிக்கும் வேட்டையில் இறங்குகிறது. ராஜுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் சிவாவின் முயற்சி வெற்றிபெற்றதா, இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

90-களின் பிற்பகுதியில் ஆந்திராவில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. காவல்துறைக்கும் சிபிஐக்கும் இடையிலான மோதலில், அறத்தின் பக்கம் நின்று போராடும் கடைநிலைக் காவலன் கதையை பரபரப்பான சேஸிங், வலுவான கதாபாத்திரங்கள், தனித்துவ நகைச்சுவை ஆகியவற்றால் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், வழக்கமான கதைக் களம், ஊகிக்கக்கூடிய திருப்பங்கள், திணிக்கப்பட்ட காட்சிகள், தேவையற்ற பாடல்கள் சோர்வைத் தருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post