
பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
அஜர்பைஜானின் பாகு நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி, செர்பியாவின் ஜோரானா அருனோவிக், டாமிர் மைக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி 16 புள்ளிகளை குவித்து அசத்தியது. செர்பியா ஜோடியால் 14 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games