பெற்ற மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சிறை

சொந்த மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த விஸ்வ பாண்டியன் என்பவருக்கும், அண்ணாநகர் அன்பு காலனியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணமான நிலையில் இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.

image

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இவரது மகன் 4 வயது குழந்தையாக இருந்தபோது, தந்தை விஸ்வ பாண்டியன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார், விஸ்வ பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

image

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சமி, விஸ்வ பாண்டியன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post