
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயி ஜோசப் (65) இவரது மனைவி ஆர்க்னஸ் மேரி (60). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜோசப் தனது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பணமங்கலம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News