
தமிழக அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும் என தலைமை அஞ்சல் பொது மேலாளர் உறுதியளித்துள்ளதாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் பணவிடை, சிறுசேமிப்பு தொடர்பான படிவங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் தமிழில் இல்லை என்றும் கூறி ஒன்றிய அமைச்சருக்கும் தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்து மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதையும் இந்தி திணிப்பையும் ஏற்க முடியாது என தெரிவித்ததாக சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தலைமை பொது மேலாளர் தமிழ்நாட்டில் அஞ்சல் துறை படிவங்கள் அனைத்திலும் தமிழ் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார் என சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு படிவங்களில் தமிழ் இருக்கும் என்றும் பிற 40 வகையான படிவங்களும் அடுத்த ஒரு மாதத்தில் அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளதாகவும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது அன்னைத்தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
The Chief Constituency General Manager has assured that all the forms used in Tamil Nadu post offices will be in Tamil. Venkatesh said.
In a statement, Madurai Lok Sabha member S. Venkatesh said in a statement that he had written to the Union Minister and the Chief Postmaster General stating that cash and savings forms at post offices in Tamil Nadu were only available in English and Hindi but not in Tamil. In this situation, the Chief Minister met the General Manager of the Post and informed him that the neglect of state languages and the dumping of Hindi could not be accepted, said Venkatesh.
Following this, the General Manager has given a written assurance that Tamil will be in all post office forms in Tamil Nadu, said S. Venkatesh. He said Tamil would be available in cash and savings account forms at 14,000 post offices in Tamil Nadu within the next two weeks and 40 other forms would be sent to post offices in the next one month. This is another victory for Anna Tamil, said S. Venkatesh MP.
Tags:
News