
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் கொரோனா விதிகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்த்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் அங்காடிகள் அதிகமுள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை, பாடி போன்ற இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...கோவை: மூர்க்கமாக தாக்கிய கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News