
சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எரிபொருட்களின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் இன்று பெட்ரோல் விலை டீசல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசு உயர்ந்து 104.52ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசு உயர்ந்து 100.59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை லிட்டருக்கு சுமார் 21 ரூபாய் அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News