சசிகலாவை சேர்ப்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் முடிவெடுப்பார்கள்: சென்னை மாவட்ட செயலாளர்கள்

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் ஆராய்ந்து தக்க முடிவுகளை எடுப்பார்கள். ஆளுக்கு ஒரு கருத்தை பேசவேண்டாம் என அதிமுக அமைப்புரீதியாக உள்ள 5 சென்னை மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்யா, ராஜேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் சசிகலா விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லிய கருத்திருக்கு ஆளுக்கு ஒரு கருத்தை சொன்னால் அது சரியாக இருக்காது. அப்படி பேசுபவர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

image

மேலும் இந்த விவகாரம் குறித்து சரியான முடிவை ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் ஒருசேர தக்க முடிவுகளை எடுப்பார்கள் என்றும் அவர்கள் அந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post