
நான், நாகப்பட்டினம் தேசிய ஆரம்பப்பள்ளியில் படித்த காலங்களில் டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சியடையவில்லை. இப்போதிருப்பது போல, எல்.கே.ஜி. யூ.கே.ஜி வகுப்புகளும் அப்போது கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் படிப்பை தொடங்க வேண்டும். 1962-ம் ஆண்டு நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் சின்னப்பிள்ளைகளுக்கு என்ன சேட்டை, விளையாட்டுத்தனம் இருக்குமோ, அது அனைத்தும் எனக்கும் இருந்தது. ஆனால் கூடவே பயமும் அதிகமாக இருக்கும்.
வழக்கம் போல பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன்! அப்போது இந்தியா மீது சீனா, போர் தொடுக்கப்போகிறது என்ற செய்தி ஊரில் பரவி இருந்தது. ‘அந்த போர் பாதிப்பு நாகப்பட்டினத்துக்கும் ஏற்படும்; இங்கும் குண்டு போடுவார்கள்’ என்று யாரோ ஒருவர் சொன்னது காட்டுத் தீயாகி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்