
அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் வேகக்கூட்டணி கடும் அழுத்தம் கொடுத்தது. தொடக்க வீரரான டேக்நரைன் சந்தர்பால் 11 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games