
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அஸ்வின் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் அவரை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது சிஎஸ்கே அணி நிர்வாகம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. முதல் சுற்றோடு வெளியேறியது. கேப்டன் ருதுராஜுக்கு மாற்றாக தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். இருப்பினும் அணியால் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games