
புலவாயோ: தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார்.
இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் ஆட்டத்தில் 43 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சீயன் வில்லியம்ஸ் 83, வெஸ்லி மாதவரே 25, கேப்டன் கிரெய்க் இர்வின் 17 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் பிரெனலன் சுப்ராயன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கோடி யூசுப், வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games