
பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் 400 ரன்களை கடந்தது. 3ஆவது நாள் முடிவில் இந்திய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games