
ஐபிஎல் 2025 தொடரின் 65வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் அபிஷேக் சர்மா 34 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர். 4வது ஓவரில் இறங்கிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் விளாசினார். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games