
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்த அணிகளை தவிர மீதமுள்ள 7 அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 14 ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கவில்லை.
எனினும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்டர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கின்றன. இந்த 7 அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்