மும்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் | ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025 தொடரின் 69வது ஆட்டத்தில் மும்பையை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்.

ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். திலக் வர்மா 1, வில் ஜாக்ஸ் 17, ஹர்திக் பாண்டியா 26 என 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post