
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் சேர்ந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சாய் சுதர்ஷன் 39 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளுக்கு 84 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாஸ் பட்லர் அரை சதம், வாஷிங்டன் சுந்தர் 13, ராகுல் டிவாட்டியா 9, ஷாருக் கான் 5 என குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games