குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி: ஆர்சிபி-க்கு முதல் தோல்வி | IPL 2025

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 14-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டாஸை இழந்த ஆர்சிபி முதலில் பேட் செய்தது. பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 7 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் மற்றும் பில் சால்ட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post