ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் லக்னோ வீரர் ஷர்துல் தாக்குர். ஹைதராபாத் அணி 190 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. பெரிய அளவில் அனுபவம் இல்லாத லக்னோவின் பவுலிங் யூனிட் பவர் ஹீட்டர்கள் அதிகம் கொண்ட ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை எப்படி சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games