நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் வேலையை செய்தேன்: சொல்கிறார் விராட் கோலி

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. 242 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 45 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறியதாவது:

அரை இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான முக்கியமான ஆட்டத்தில் சிறந்த முறையில் பேட்டிங் செய்ய முடிந்தது நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த ஒரு ஆட்டத்தில் பங்களிப்பை வழங்கியது நன்றாக இருக்கிறது, கடந்த ஆட்டத்தில் கற்றுக்கொண்டதை புரிந்துகொண்டு செயல்பட்டோம்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post