நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார்; அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீதான புகார் குறித்து அறிக்கை கிடைக்கப் பெற்றதும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ கூறியுள்ளார்.

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளரின் செலவை குறைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி தொடர்ந்து தன்னை துன்புறுத்துகிறார் என்றும், செலவின பதிவுகளால் திமுக வேட்பாளருக்கு ஏதேனும் பாதகம் நடந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என்றும் உதவி தேர்தல் செலவின பார்வையாளர், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post