IND vs ENG 2-வது டெஸ்ட் | “இலக்கை விரைந்து எட்ட விரும்புகிறோம்” - ஜேம்ஸ் ஆண்டர்சன்

விசாகப்பட்டினம்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை விரைந்து எட்ட தங்கள் அணி விரும்புவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் மேலும் 332 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்களும், இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post