நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘விதி’யால் வென்றது பாகிஸ்தான் அணி

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்துக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. தனது 3-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் விளாசிய நிலையில் மொகமது வாசிம் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்த நிலையில் இப்திகார் அகமது பந்தில் வெளியேறினார். 2-வதுவிக்கெட்டுக்கு இந்த ஜோடி 180 ரன்கள் சேர்த்தது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post