ODI WC 2023 | டெங்குவில் இருந்து மீண்ட நிலையில் அகமதாபாத்தில் பயிற்சி மேற்கொண்ட கில்!

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் விளையாடவில்லை. இந்த சூழலில் அகமதாபாத் நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிரபார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழலில் வியாழக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அந்தப் படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அவர் அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ள இந்திய அணியுடன் இணைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வரும் சனிக்கிழமை அன்று விளையாட உள்ளது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post