ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு துறைக்கும் இடையிலான மோதலாகவும், உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் மோதி இருந்தன. மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி அசாத்தியமான வகையில் மட்டை வீச்சை வெளிப்படுத்தி வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post