சலங்கையைக் காலில் கட்டி பால பாடம் தொடங்கும்போதே, அரங்கேற்றத்துக்கு நாள் குறிக்கும் காலமிது. ஆனால், அப்படி அவசரப்படாமல், பத்தாண்டுகளாக ஸ்ரீதேவி நிருத்யாலயா நடனப் பள்ளியில் குரு, டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணனிடம் நடனம் கற்றதன் பலனை, அண்மையில் வாணிமகாலில் தன் அரங்கேற்றத்தின் மூலம் அறுவடை செய்தார் லக்ஷிதா மதன்.
கணபதி துதியோடு தொடங்கிய நாட்டிய நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடந்ததற்கு குரு, ஷீலா உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலும் அவரின் நடனத் திறமையும் துலக்கமான காலப்பிரமாணங்களுடன் கூடிய நட்டுவாங்கமும் ஜனனி ஹம்சினியின் குரலிசையும் குரு பரத்வாஜின் மிருதங்க இசையும் முத்துக்குமாரின் குழலிசையும் அனந்தநாராயணனின் வீணை இசையும் அனந்தகிருஷ்ணனின் வயலின் இசையும் பக்க பலமாக அமைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema