'அப்பாவுக்காக தான் இதை செய்தேன்’ - லக்னோ பவுலர் மொஹ்சின் கான்

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் மும்பை அணியின் வெற்றிக்கு இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை லக்னோ அணிக்காக வீசிய மொஹ்சின் கான், வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 0, 1, 1, 0, 1, 2 என அந்த ஓவரில் அவர் ரன்களை கொடுத்திருந்தார். அதுவும் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் என இருவரும் ஸ்ட்ரைக்கில் இருந்த போது இதை அவர் செய்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் தனது அணியை பிளே ஆஃப் வாய்ப்புக்கு மிக அருகில் நெருங்க செய்துள்ளார் மொஹ்சின் கான். 24 வயதான அவர் கடந்த சீசனில் லக்னோ அணிக்காக ஜொலித்தார். இருந்தபோதும் ஓராண்டு காலம் இடது பக்க தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். இந்த சூழலில் மீண்டும் ஐபிஎல் களத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post