
லண்டன்: பிரபல கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, உயர்தர சிகிச் சைக்கு பிறகு குணமடைந்து, பிரிட்டனில் உள்ள உறவினர் வீட்டில் ஓய்வில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் அம்ரித் ராம்நாத் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது: இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ, கடந்த மார்ச் 25-ம் தேதிபிரிட்டன் சென்றிருந்தார். திடீரென அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்கு உள்ள உயர்தர மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு குருதிநாள அழற்சி (Aneurysm) நோய் கண்டறியப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema