
பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும், வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது... "இலங்கையில் இன்று நிலைமை மோசமாக இருக்கிறது. இலங்கைக்கு பக்கத்துக்கு நாடு என்கிற அடிப்படையிலும், தமிழக மக்களின் நலன் கருதியும் நாம் உதவி செய்கிறோம். இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் இந்தியா வரமுடியவில்லை. கொழும்பிலிருந்து, ஜவ்னாவிற்கு நிதிஉதவி அளித்து ரயில் மூலம், விமான நிலையத்திற்கு வரவழைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

அங்கு தமிழகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது, ஆனால், தீர்வே இல்லாமல், இங்குள்ளவர்கள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கைக்கு டீசல் ,பெட்ரோல், உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு ,இந்தியா மருந்து கொடுத்து வருகிறது.
இலங்கையில் 14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர். வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. யாழ்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீனா இலங்கைக்கு உதவுவது இலங்கை மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு தான்.

வடகிழக்கு பகுதியில் 46000 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. மலையக பகுதி மக்களுக்காக 16000 வீடுகள் கட்டித்தந்துள்ளோம். இலங்கை கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இலங்கை, இந்தியாவிடம் கேட்பது நியாயமில்லை" என்றார்.
‘தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது, இந்தியை திணித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். செய்திக்காக கருத்து சொல்பவர்களுக்கு நான் எப்படி கருத்து சொல்வது' என தருமபுரி எம்.பி.செந்தில் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள்.
காங்கிரஸ் அழிவதுபோல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என தெரிவித்த அவர், மீண்டும் பிரஷாந்த் கிஷோர் தமிழகத்திற்கு வந்து ,திமுகவிடம் மீண்டும் ஓப்பந்தம் போட்டு கட்சியை வளர்ப்பார் என்றார்.

“எல்.ஐ.சி இன்னும் அரசு நிறுவனம் தான். இழப்பை சந்திக்கின்ற நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்கிறோம். நானும் ராஜா எனக்கூறி, தமிழக முதல்வர் இப்போது தான் துபாய்க்கு போய்விட்டு வந்தார். தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய விக்கிரமராஜா, தேர்தலுக்கு முன் மால்கள் ஏதும் தமிழகத்தில் வர அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னார். ஆனால் லூலு மால் வருவதற்கு காரணமானவரை விக்கிரமராஜா புகழ்ந்து தள்ளுகிறார்.
திருமாவளவனை விவாதத்துக்கு கூப்பிட்டேன், அப்போது அந்த கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, நான் விவாதத்துக்கு வருகிறேன் என்றார். ஆனால், திருமாவளவன் அங்கு யாரும் செல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டார். நான் மூன்று புத்தகம் அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அங்கிருந்து ஏதும் வரவில்லை. விவாதத்திற்கும் வரவில்லை.

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த முடியாது என்பது தேர்தலுக்கு முன்பு தெரியாதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்காக கவர்ச்சியான திட்டங்களை கொண்டு வந்து பொய் சொல்லி வாக்கு வாங்கி விட்டு ,இப்போது நிலைப்பாட்டை மாற்றுகிறார்கள்.
ஆறு மாதத்திற்கு முன்னே கோவையில் லூலு மால் வருவதற்கு ஆயுத்த பணிகளை மேற்கொண்டு பணிகளை செய்ய துவங்கிவிட்டார்கள். ஆனால், லூலு மால் வருவதற்கு ஒப்பந்தம் இப்போது போட்டதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். மின் தட்டுபாடு எதனால் என்று அமைச்சரிடம் கேட்டால் நிலக்கிரி தட்டுப்பாடு என்கிறார்.
தமிழகத்தில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் பேசுவார்கள்" என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News