கன்னியாகுமரி: ஆம்னி பஸ்- டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

காவல்கிணறு அருகே ஆம்னி பஸ்ஸும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் இருந்து காய்கறி வாங்குவதற்காக நெல்லை மாவட்டம் காவல் கிணற்றில் உள்ள தனியார் சந்தைக்கு டெம்போவில் மூன்று பேர் சென்றுள்ளனர். இவர்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்குச் சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக டெம்போ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

image

இதில், டெம்போவில் வந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆம்னி பஸ் டிரைவர் உட்பட பஸ்ஸில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

image

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post