இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: வெடி வெடித்துக் கொண்டாடிய சுற்றுலா பயணிகள்

11 மாதங்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வெடி வெடித்துக் கொண்டாடினர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி தனி மனித இடைவெளியை கடைபிடித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

image

மெயின் அருவி, ,ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும், மேக்கரை மற்றும் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் அருவிகளிலும் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அருவிக்கும் மேற்பார்வையாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

image

சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அருவிக்கரையில் வெடி வெடித்துக் கொண்டாடினர். தற்போது சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post