“பேருந்துகளில் அவசர ஒலி அழைப்பு பட்டன், கேமிராக்கள் பொருத்தும் திட்டம்”- அமைச்சர் தகவல்

"சென்னையில் முதற்கட்டமாக 2,100 பேருந்துகளில் பேனிக் பட்டன் எனும் அவசர ஒலி அழைப்பு அமைக்கப்படும்" என்று போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “நிர்பயா திட்டத்தின் கீழ், பேருந்தில் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். இதன் மூலம் பணிமனைக்கு தகவல் உடனடியாக பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Private-and-state-buses-will-not-run-till-July-31-says-Govt

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்ணும் அனைத்து பேருந்துகளும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், பழங்குடி மக்கள் என பல தரப்பினரும் பயணம் செய்கையில், அவர்களை சில நடத்துனர்கள் இறக்கிவிடுவதை காணமுடிகிறது. எனவே, இது தொடர்பாக நடத்துனர் - ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட விவகாரம்: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தற்காலிக பணி நீக்கம்

இதேபோல மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவையன்றி, தீபாவளி போன்று பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29 ம் தேதி அங்கீகரிக்கப்படும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபடும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post