ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரின் 9 வங்கி கணக்குகள் முடக்கம்

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரின் 9 வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் (வயது 45) வீட்டில், திருவண்ணாமலை மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ச்சியாக 15 மணிநேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட அந்தச் சோதனையின் முடிவில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.10,73,520 வரைவோலையாகவும், 23,32,770 ரூபாய் ரொக்கமாகவும், 193.75 சவரன் தங்கநகைகள், 2.17 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி மதிப்பிலான நில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதில் தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டும் கணக்கீடு செய்யப்பட்டு மீண்டும் செல்வ குமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

image

இதைத்தொடர்ந்து அவர் மீது Vellore Vigilance and Anti-Corruption Cr.No. 20/2021 u/s 13(2) r/w 13(1)(e) of the PC Act 1988 and 109 IPC r/w 13(2) r/w 13(1)(e) of the PC Act 1988 உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் 9 வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடக்கம் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி உதவி பொறியாளராக கடந்த 2013 இருந்து 2017 ஆண்டுக்கான வங்கி கணக்குகளை கணக்கிடு செய்வதற்காக 9 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்,2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் எனவும் பின்னர் 2008 ஆம் ஆண்டு செல்வகுமார் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது இதில் 2013 இருந்து 2017 ஆண்டுகளுக்கு இடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல்.

தொடர்புடைய செய்தி: லஞ்ச ஒழிப்புத் துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கு வாபஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post