புதுக்கோட்டை: உண்டியல் பணத்தை நீர்நிலை சீரமைக்க கொடுத்த மாணவன்

நீர்நிலையை சீரமைக்க உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் நீர்நிலையை சீரமைக்க தனது உண்டியல் சேமிப்பை வழங்கிய பள்ளி மாணவனின் செயல் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் பல வருடங்களுக்கு பிறகு ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது. ஆனால், ஆலங்குடிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், செரியலூர் உள்பட பல கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், வரத்து வாரிகள் இல்லாததால் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் உள்ள நிலையில் கீரமங்கலம் - நகரம் - சேந்தன்குடி ஆகிய கிராமங்களை ஒருங்கிணைக்கும் பெரியாத்தாள் ஏரி தண்ணீர் நிரப்பால் பல கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் அதிகரிக்கும். இதனால் கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து உள்ள பழைய கால்வாயை நீரின்றி அமையாது உலகு என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பினர் பொதுமக்களிடம் நிதி பெற்று சீரமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கால்வாயை சீரமைக்க கீரமங்கலம் வடக்கு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் மகன் கிஷோர், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1096 ரூபாயை இளைஞர் அமைப்பினரிடம் வழங்கினார். பள்ளி மாணவனின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post