
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு, தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த முன்னாள் ஊழியர் பர்சானா என்ற பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். தான் அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும், அவர் அனுப்பிய மெயிலால் தான் தனக்கு வேலை பறிபோனதாக புலம்பினார். போலீசார் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனிடையே அப்பெண் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். உடனே போலீசார் அவர்மீது தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.
இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும், அதனால் மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி தீக்குளிக்க முயன்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News