
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் தொடர்மழை காரணமாக முழு வெள்ளத்தின் பாய்ச்சலில் கீழ்மலை முலையாறு அருவி ஆர்பரித்துக் கொட்டுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பகலில் லேசான மழையும் இரவில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீழ் மலையின் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் ரம்மியமான குழலில், பசுமை வனத்தில் இருந்து பாயும் முலையாறு அருவி, முழு வெள்ளத்தின் பாய்ச்சலில் கொட்டுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News