
திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இல்லம் தேடி கல்வித் திட்டம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி புகட்டும். நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது. மாநில சுயாட்சி மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில்தான் இல்லம் தேடி கல்வித் திட்டங்களையும் கொண்டு வருகிறோம்.
நீரஜ் சோப்ரா உட்பட 11 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள்தான் திராவிடம். ஒரு காலத்தில் இன்னார்தான் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக்கூடாது என்று இருந்த நிலையை மாற்றிய ஆட்சி, திராவிட ஆட்சி. ஏழை எளிய விளிம்புநிலை மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு பலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News