இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 2-1 என வெல்லும்: ஆரூடம் சொல்கிறார் ஆரோன் பின்ச்

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவும், மற்றொரு மூத்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளனர். இந்நிலையில் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும், வரவிருக்கும் தொடர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆரோன் பின்ச் கூறியதாவது:


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post