
மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி வரும் புதன்கிழமை இங்கிலாந்து அணி உடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், தேசத்துக்காக விளையாடுவது எனது உந்து சக்தி என இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கி உள்ளது. இந்த தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சிராஜ் விளையாடினார். இதன் மூலம் மொத்தம் 109 ஓவர்களை வீசி 13 விக்கெட்டுகளை இதுவரை இந்த தொடரில் அவர் கைப்பற்றியுள்ளார். பணிச்சுமை குறித்தெல்லாம் பேசாமல் தனது ஆட்டத்தில் சிராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games