‘அவர் பேட் செய்ய வந்தால் மட்டும் போதும்’ - தோனி குறித்து கிறிஸ் கெயில் கருத்து

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி மிகவும் லேட்டாக களம் காண்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அது குறித்து தனது கருத்தை முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார்.

“ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்து உள்ளது. அவரால் முடிகின்ற வரையில் விளையாடலாம். தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த மனிதரான அவர் மீது தேவை இல்லாத அழுத்தங்களை செலுத்த வேண்டாம். அவர் தான் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மதிப்பு கூட்டுகிறார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post