
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார்.
மற்றொரு தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறவே, அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் கடைசியாக இறங்கிய ஷஷாங்க் சிங் 52, மார்கோ ஜென்சென் 34 ரன்கள் எடுத்து அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games