ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரோஹித்தை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games