ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games